தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்துள்ளது ஒரு குழந்தை. அந்த குழந்தையின் உடலை, Shroud எனச் சொல்லக்கூடிய துணியில் சுத்தி கொடுக்காமல், வெறுமனே அட்டை டப்பாவில் வைத்து, பெற்றோரிடம் பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் வழங்கியுள்ளார். மனித நேயமற்ற இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து அந்த குழந்தையின் உடலை எடுத்துச் சென்ற குழந்தையின் பெற்றோர் இரத்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.ஒரு பக்கம் குழந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறு பக்கம், இறந்துபோன குழந்தையை முறைப்படி வழங்காமல்…தமிழக மருத்துவத்துறை ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதை நினைத்து நினைத்து தாங்க முடியாத துக்கத்தை வெளியே சொல்ல முடியாமல், குழந்தையின் பெற்றோர், இடுகாட்டில் கண்ணீர் மல்க குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தெய்வமே இது தகுமா? என இடிந்துபோய் உட்கார்ந்த போது, அவர்களைத் தேற்ற யாராலும் முடியவில்லை.

இந்நிலையில், திமுக அரசின் தரம் கெட்ட இந்த செயலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாரத்தான்களை நடத்துவதிலும், முதலமைச்சரின் தவறுகளைப் பாதுகாப்பதிலும் மும்முரமாக உள்ளார். நாட்டில் ஒரு காலத்தில் தேடப்பட்டு வந்த மருத்துவக் கட்டமைப்பு இன்று ஊழலில் திளைக்கும் திமுக அரசின் கீழ் அடிமட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் திரும்பப் பெற முடியாத நிலையை அடையும் அபாயம் உள்ளது.

வலியால் துடித்த பெண்ணைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை, அவரது குழந்தையின் சடலம் அட்டைப்பெட்டியில் சென்னை அரசு மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ள மக்கள் படும் இன்னல்களுக்கு இழப்பீடு அறிவிப்போ, பெயரளவுக்கு இடைநீக்கம் செய்வதோ தீர்வாகாது என்பதையும், மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் திமுக அரசு உணர வேண்டிய தருணம் இது என குட்டு வைத்துள்ளார்.

என்ன செய்யப்போகிறது திமுக அரசு?

Tags: child death issuebjpannamalaitamilnadu governmentkilpakkam govt hospital
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் : இந்திய மகளிர் அணி வெற்றி!

Next Post

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies