தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்துள்ளது ஒரு குழந்தை. அந்த குழந்தையின் உடலை, Shroud எனச் சொல்லக்கூடிய துணியில் சுத்தி கொடுக்காமல், வெறுமனே அட்டை டப்பாவில் வைத்து, பெற்றோரிடம் பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் வழங்கியுள்ளார். மனித நேயமற்ற இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து அந்த குழந்தையின் உடலை எடுத்துச் சென்ற குழந்தையின் பெற்றோர் இரத்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.ஒரு பக்கம் குழந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறு பக்கம், இறந்துபோன குழந்தையை முறைப்படி வழங்காமல்…தமிழக மருத்துவத்துறை ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதை நினைத்து நினைத்து தாங்க முடியாத துக்கத்தை வெளியே சொல்ல முடியாமல், குழந்தையின் பெற்றோர், இடுகாட்டில் கண்ணீர் மல்க குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தெய்வமே இது தகுமா? என இடிந்துபோய் உட்கார்ந்த போது, அவர்களைத் தேற்ற யாராலும் முடியவில்லை.

இந்நிலையில், திமுக அரசின் தரம் கெட்ட இந்த செயலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாரத்தான்களை நடத்துவதிலும், முதலமைச்சரின் தவறுகளைப் பாதுகாப்பதிலும் மும்முரமாக உள்ளார். நாட்டில் ஒரு காலத்தில் தேடப்பட்டு வந்த மருத்துவக் கட்டமைப்பு இன்று ஊழலில் திளைக்கும் திமுக அரசின் கீழ் அடிமட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் திரும்பப் பெற முடியாத நிலையை அடையும் அபாயம் உள்ளது.

வலியால் துடித்த பெண்ணைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை, அவரது குழந்தையின் சடலம் அட்டைப்பெட்டியில் சென்னை அரசு மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ள மக்கள் படும் இன்னல்களுக்கு இழப்பீடு அறிவிப்போ, பெயரளவுக்கு இடைநீக்கம் செய்வதோ தீர்வாகாது என்பதையும், மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் திமுக அரசு உணர வேண்டிய தருணம் இது என குட்டு வைத்துள்ளார்.

என்ன செய்யப்போகிறது திமுக அரசு?

Tags: child death issuebjpannamalaitamilnadu governmentkilpakkam govt hospital
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் : இந்திய மகளிர் அணி வெற்றி!

Next Post

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies