அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!
Sep 9, 2025, 11:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்ததாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஸ்ரீராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தியில் ஸ்ரீராமா் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், 1,600 சிற்பக் கலைஞர்கள் மூலம் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

இக்கோவிலுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350-க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவிக்கு கருவறைகள் அமைக்கப்படுகின்றன. வரும் ஜனவரி 22-ம் தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த உத்தரப் பிரதேச அரசு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், கோவிலின் நுழைவு வாயில், முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி கருவறைகள், லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு 44 தேக்கு மரக்கதவுகளை சென்னையை அடுத்த மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதி மர சிற்பக் கலைஞர் ரமேஷ் தலைமையில், மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில், 2 யானைகள் துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும், கழுகுகள் பறப்பது போலும் பல்வேறு வடிவமைப்புகளுடன் கதவுகள் வடிமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பணிகள் குறித்து அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தியில் அமையும் இராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கட்டுமானப் பொருள்கள் வந்து சேர்ந்துள்ளன.

அதன்படி, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோவிலுக்குத் தேவையான மணிகள் சென்றடைந்தன. அதேபோல, தங்கப் பட்டை வேயப்பட்ட மரக் கதவுகள் ஐதராபாத்திலிருந்து வந்திருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கதவுகளை தயாரித்து வரும் தனியார் நிறுவனம், கோவிலின் அனைத்து சன்னதிகளையும் மூடுவதற்கு 118 மரக்கதவுகளை தயாரித்து வருகிறது.

இன்னும் ஏராளமான கதவுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. 9 அடி உயரமுள்ள 18 கதவுகள் தயாராகி விட்டன. அவை ஜனவரி 1-ம் தேதி கோவிலில் பொருத்தப்படும்” என்றார்.

Tags: ReadytempleAyodyaDoors
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்!

Next Post

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்: 1 மணிக்கு இறுதி ஊர்வலம்!

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies