அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!
Sep 2, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்ததாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஸ்ரீராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தியில் ஸ்ரீராமா் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், 1,600 சிற்பக் கலைஞர்கள் மூலம் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

இக்கோவிலுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350-க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவிக்கு கருவறைகள் அமைக்கப்படுகின்றன. வரும் ஜனவரி 22-ம் தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த உத்தரப் பிரதேச அரசு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், கோவிலின் நுழைவு வாயில், முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி கருவறைகள், லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு 44 தேக்கு மரக்கதவுகளை சென்னையை அடுத்த மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதி மர சிற்பக் கலைஞர் ரமேஷ் தலைமையில், மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில், 2 யானைகள் துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும், கழுகுகள் பறப்பது போலும் பல்வேறு வடிவமைப்புகளுடன் கதவுகள் வடிமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பணிகள் குறித்து அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தியில் அமையும் இராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கட்டுமானப் பொருள்கள் வந்து சேர்ந்துள்ளன.

அதன்படி, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோவிலுக்குத் தேவையான மணிகள் சென்றடைந்தன. அதேபோல, தங்கப் பட்டை வேயப்பட்ட மரக் கதவுகள் ஐதராபாத்திலிருந்து வந்திருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கதவுகளை தயாரித்து வரும் தனியார் நிறுவனம், கோவிலின் அனைத்து சன்னதிகளையும் மூடுவதற்கு 118 மரக்கதவுகளை தயாரித்து வருகிறது.

இன்னும் ஏராளமான கதவுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. 9 அடி உயரமுள்ள 18 கதவுகள் தயாராகி விட்டன. அவை ஜனவரி 1-ம் தேதி கோவிலில் பொருத்தப்படும்” என்றார்.

Tags: templeAyodyaDoorsReady
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்!

Next Post

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்: 1 மணிக்கு இறுதி ஊர்வலம்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies