பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்!
Sep 13, 2026, 11:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்கும், புதிய அமிர்த பாரத் இரயில்கள் மற்றும் வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (டிசம்பர் 30) அயோத்திக்கு செல்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அயோத்தி நகரில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அயோத்தியில் புதிதாக விமான நிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட இரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இவற்றை பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி நாளை அயோத்திக்கு வருகை தருகிறார். மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது அவர், மாநிலத்தின் 15,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் 11,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுடன் தொடர்புடைய சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.

மேலும், இப்பயணத்தின்போது பிரதமர் மோடி, இராமர் கோவில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிடுகிறார். இராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் வசதிக்காக முதல் 100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட இரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiairportAyodyaInagaurateRailway Station
Share
Tweet
SendShare
Previous Post

மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர் விஜயகாந்த்! -ராமதாஸ்

Next Post

அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies