2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!
Mar 19, 2026, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வரும் 2080-ம் ஆண்டுக்கு பிறகு, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா மாறும் என்று சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சி.இ.பி.ஆர். நிறுவனம் உலக பொருளாதார லீக் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

மேலும், மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, 2080-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா மற்றும் அமெரிக்காவை முந்தி, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாகவும் இந்தியா மாறும். அப்போது, இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவை விட 90 சதவீதம் அதிகமாகவும், அமெரிக்காவை விட 30 சதவீதம் அதிகமாகவும் இருக்கும்.

இந்தியாவில் 2024 முதல் 2028-ம் ஆண்டு வரை சராசரியாக 6.5 சதவீத அளவில் நிலையான வலுவான வளர்ச்சி இருக்கும். இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கான முக்கிய உந்து சக்திகளாக அந்நாட்டின் இளைஞர்கள், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்கள் மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு போன்றவை உள்ளன.

எனினும், வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை, மனித மூலதன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாகத் திகழ தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம். இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள அரசு, தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சவால்கள் இருந்த போதிலும், நடப்பு 2022 – 2023-ம்ம் நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்திருக்கிறது. வரும் 2023 – 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IndiaBecomeSuper power2080
ShareTweetSendShare
Previous Post

வடகொரியா புதிய அறிவிப்பு – கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

Next Post

நடிகர் லியோ பிரபு மறைவு!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies