2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!
Jul 26, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வரும் 2080-ம் ஆண்டுக்கு பிறகு, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா மாறும் என்று சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சி.இ.பி.ஆர். நிறுவனம் உலக பொருளாதார லீக் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

மேலும், மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, 2080-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா மற்றும் அமெரிக்காவை முந்தி, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாகவும் இந்தியா மாறும். அப்போது, இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவை விட 90 சதவீதம் அதிகமாகவும், அமெரிக்காவை விட 30 சதவீதம் அதிகமாகவும் இருக்கும்.

இந்தியாவில் 2024 முதல் 2028-ம் ஆண்டு வரை சராசரியாக 6.5 சதவீத அளவில் நிலையான வலுவான வளர்ச்சி இருக்கும். இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கான முக்கிய உந்து சக்திகளாக அந்நாட்டின் இளைஞர்கள், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்கள் மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு போன்றவை உள்ளன.

எனினும், வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை, மனித மூலதன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாகத் திகழ தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம். இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள அரசு, தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சவால்கள் இருந்த போதிலும், நடப்பு 2022 – 2023-ம்ம் நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்திருக்கிறது. வரும் 2023 – 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: 2080IndiaBecomeSuper power
ShareTweetSendShare
Previous Post

வடகொரியா புதிய அறிவிப்பு – கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

Next Post

நடிகர் லியோ பிரபு மறைவு!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies