2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!
Jun 6, 2025, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வரும் 2080-ம் ஆண்டுக்கு பிறகு, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா மாறும் என்று சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சி.இ.பி.ஆர். நிறுவனம் உலக பொருளாதார லீக் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

மேலும், மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, 2080-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா மற்றும் அமெரிக்காவை முந்தி, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாகவும் இந்தியா மாறும். அப்போது, இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவை விட 90 சதவீதம் அதிகமாகவும், அமெரிக்காவை விட 30 சதவீதம் அதிகமாகவும் இருக்கும்.

இந்தியாவில் 2024 முதல் 2028-ம் ஆண்டு வரை சராசரியாக 6.5 சதவீத அளவில் நிலையான வலுவான வளர்ச்சி இருக்கும். இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கான முக்கிய உந்து சக்திகளாக அந்நாட்டின் இளைஞர்கள், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்கள் மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு போன்றவை உள்ளன.

எனினும், வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை, மனித மூலதன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாகத் திகழ தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம். இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள அரசு, தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சவால்கள் இருந்த போதிலும், நடப்பு 2022 – 2023-ம்ம் நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்திருக்கிறது. வரும் 2023 – 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IndiaBecomeSuper power2080
ShareTweetSendShare
Previous Post

வடகொரியா புதிய அறிவிப்பு – கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

Next Post

நடிகர் லியோ பிரபு மறைவு!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies