2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!
Jul 26, 2026, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2080-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வல்லரசு நாடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வரும் 2080-ம் ஆண்டுக்கு பிறகு, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா மாறும் என்று சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சி.இ.பி.ஆர். எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பொருளாதார ஆலோசனைகள் வழங்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சி.இ.பி.ஆர். நிறுவனம் உலக பொருளாதார லீக் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரும் 2032-ம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

மேலும், மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, 2080-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா மற்றும் அமெரிக்காவை முந்தி, உலகில் முதன்மையான பொருளாதார வல்லரசு நாடாகவும் இந்தியா மாறும். அப்போது, இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவை விட 90 சதவீதம் அதிகமாகவும், அமெரிக்காவை விட 30 சதவீதம் அதிகமாகவும் இருக்கும்.

இந்தியாவில் 2024 முதல் 2028-ம் ஆண்டு வரை சராசரியாக 6.5 சதவீத அளவில் நிலையான வலுவான வளர்ச்சி இருக்கும். இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கான முக்கிய உந்து சக்திகளாக அந்நாட்டின் இளைஞர்கள், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்கள் மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு போன்றவை உள்ளன.

எனினும், வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை, மனித மூலதன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாகத் திகழ தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம். இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள அரசு, தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சவால்கள் இருந்த போதிலும், நடப்பு 2022 – 2023-ம்ம் நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்திருக்கிறது. வரும் 2023 – 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IndiaBecomeSuper power2080
ShareTweetSendShare
Previous Post

வடகொரியா புதிய அறிவிப்பு – கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

Next Post

நடிகர் லியோ பிரபு மறைவு!

Related News

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies