தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!
Jul 24, 2025, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2, 3-ம் தேதிகளில் திருச்சி, கேரளா, லட்சத்தீவு என இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

திருச்சி விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் இந்த புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார்.

அதேபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவும் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.

ஆகவே, இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, நாளை காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார். காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து நேராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விமான நிலையத்தின் புதிய முனையம், திருச்சி என்.ஐ.டி.யில் கட்டப்பட்டிருக்கும் புதிய விடுதி மற்றும் பல்வேறு இரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், விமானம், இரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வித் துறைகள் தொடர்பான 19,850 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

திருச்சி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி லட்சத்தீவு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

வேகமான மற்றும் நம்பகமான இணைய சேவைகள், டெலிமெடிசின், இ-கவர்னன்ஸ், கல்வி முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் கரன்சி பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றுக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ஜனவரி 3-ம் தேதி பிரதமர் மோடி கேரளா செல்கிறார். அங்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்காக நடைபெறும் பாராட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் 2 லட்சம் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiKeralaVisittrichy airportInaguratesLakshadweep
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 2- நடுக்கத்தில் திமுக அமைச்சர்கள் – என்ன காரணம் தெரியுமா?

Next Post

ஏற்காட்டில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies