தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2, 3-ம் தேதிகளில் திருச்சி, கேரளா, லட்சத்தீவு என இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

திருச்சி விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் இந்த புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார்.

அதேபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவும் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.

ஆகவே, இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, நாளை காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார். காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து நேராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விமான நிலையத்தின் புதிய முனையம், திருச்சி என்.ஐ.டி.யில் கட்டப்பட்டிருக்கும் புதிய விடுதி மற்றும் பல்வேறு இரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், விமானம், இரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வித் துறைகள் தொடர்பான 19,850 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

திருச்சி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி லட்சத்தீவு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

வேகமான மற்றும் நம்பகமான இணைய சேவைகள், டெலிமெடிசின், இ-கவர்னன்ஸ், கல்வி முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் கரன்சி பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றுக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ஜனவரி 3-ம் தேதி பிரதமர் மோடி கேரளா செல்கிறார். அங்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்காக நடைபெறும் பாராட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் 2 லட்சம் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiKeralaVisittrichy airportInaguratesLakshadweep
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 2- நடுக்கத்தில் திமுக அமைச்சர்கள் – என்ன காரணம் தெரியுமா?

Next Post

ஏற்காட்டில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies