லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 
Jun 6, 2025, 11:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 

Web Desk by Web Desk
Jan 9, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லாமல் இருந்திருந்தால், அரேபிய கடல் பகுதியில் உள்ள வெப்பமண்டல சொர்க்கமான லட்சத்தீவுகள்  பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டிருக்கும்.

சுதந்திரத்திற்கு முன், துணைக் கண்டம் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்டது, அவை அனைத்தும் இந்திய ஒன்றியத்தில் சேர ஆர்வமாக இல்லை.சர்தார் பட்டேலின் இடைவிடாத இராஜதந்திரம் பலனளித்தது, அவர் இந்த சமஸ்தானங்களில் உள்ள அரச அதிகாரிகளைச் சந்தித்து சுதந்திர இந்தியாவில் சேர்ந்தால் அரச குடும்பங்களின் மாண்பு மேலோங்கும் என்று கூறினார்.

இந்நிலையில் சுதந்திரத்தின் போது லட்சத்தீவு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தது.இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின்னர், துணைக் கண்டமானது, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரிந்தன. இந்த இரண்டு பகுதிகளிலும் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருந்தனர்.

மேலும் கேரளாவில் இருந்து 496 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லட்சத்தீவில் 93 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தனர். ஆரம்பத்தில்  இதன் மீது அக்கறை செலுத்தாத  முகமது அலி ஜின்னா பின்னர் லட்சத்தீவு மீதும் தனது கவனத்தை திருப்பினார்.

தங்களது கொடியை ஏற்றிய கப்பலை லட்சத்தீவுக்கு பாகிஸ்தான் அனுப்பியது. இதுகுறித்து சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு தெரிய வந்தது. இதையடுத்து  ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கடலூரில் இருந்த முதலியார் சகோதரர்கள் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் லட்சுமணன் சாமி முதலியார் இருவரையும் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் பேசிவிட்டு, மக்களை திரட்டிக் கொண்டு லட்சத்தீவு சென்று மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக அவர்கள் இருவரும் அதனை நிறைவேற்றினர்.

லட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு  புறநானூற்றில் காணப்படுகிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர் ஆளுகையில் இருந்ததாக  தெரிவிக்கிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு பல்லவ  அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததாக காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர  மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள்  குறிப்பிடுகின்றன.

1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி  மாநில மறுசீரமைப்பின் போது லட்சத் தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனி யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1ஆம் தேதி லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் பயணத்தை தொடர்ந்து லட்சத்தீவுகள் மீதான கவனம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Tags: KeralaIndiapakistanArabian seasardar patelLakshadweep Islandsdiplomatic strain
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை சந்தித்த மொசாம்பிக் அதிபர்!

Next Post

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஏழைகளின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது! – பியூஷ் கோயல்

Related News

வானதி சீனிவாசன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் தலைமைக்கு சசி தரூர் கேள்வி!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் – ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை!

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்சுடன் ஒப்பந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

ஜம்மு – காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41-வது ஆண்டு நிறைவு – பொற்கோயில் அருகே பாதுகாப்பு அதிகரிப்பு!

கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு!

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயற்சி – கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் அபிஷேகம் செய்த விவகாரம் – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி – அக்ஷரா ஹாசன் குற்றச்சாட்டு!

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies