பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!
Sep 30, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!

செல்போன், சுமைகளை வைக்க இடம் தேடி அலைவதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 21, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன், சுமைகள் உள்ளிட்ட  பொருள்களை ஒப்படைக்க அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருகை தருவார்கள்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ந் தேதி தெப்பத்தேர்  நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து செல்கின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கால் நடையாக சென்று முருகனை தரிசிப்பார்கள்.

இதனிடையே பழனி மலைக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் செல்போனை ஒப்படைத்து செல்கின்றனர். அதற்கு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செல்போனை ஒப்படைக்கவும், திரும்ப பெறவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேபோல், பக்தர்கள் சுமைகளை வேறு ஒரு இடத்திலும், காலணிகளை மற்றொரு இடத்திலும் ஒப்படைத்து செல்ல வேண்டியுள்ளது. அதாவது ஒருவர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் 3 வெவ்வேறு இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பொருள்களை ஒப்டைக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஒப்படைத்த பொருள்களை திரும்பப் பெற மீண்டும் 3 இடங்களுக்கு அலைய வேண்டி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முருகனை தரிசிப்பதற்கு ரூ.200, ரூ.100 உள்ளிட்ட தரிசன டிக்கெட் பெற்றாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காத்திருக்கும் இடங்களில் முறையான பேன் வசதி செய்யப்படவில்லை என்றும், சில இடங்களில் பேன் இருந்தும் செயல்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டண தரிசன டிக்கெட் பெற்று காத்திருக்கும் நேரத்தில் அவசரத்திற்குக் கூட வெளியே செல்ல முடியவில்லை என்றும், இதனால் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு குடிநீர், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: DevoteesluggageThaipusa festivalpalani malaiPalaniPalani Murugan templecellphone
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: பக்தர்களுக்காக 1,100 சதுர அடியில் மிதக்கும் எல்.இ.டி. திரை!

Next Post

சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies