பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!

செல்போன், சுமைகளை வைக்க இடம் தேடி அலைவதாக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jan 21, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன், சுமைகள் உள்ளிட்ட  பொருள்களை ஒப்படைக்க அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருகை தருவார்கள்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ந் தேதி தெப்பத்தேர்  நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து செல்கின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கால் நடையாக சென்று முருகனை தரிசிப்பார்கள்.

இதனிடையே பழனி மலைக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் செல்போனை ஒப்படைத்து செல்கின்றனர். அதற்கு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செல்போனை ஒப்படைக்கவும், திரும்ப பெறவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேபோல், பக்தர்கள் சுமைகளை வேறு ஒரு இடத்திலும், காலணிகளை மற்றொரு இடத்திலும் ஒப்படைத்து செல்ல வேண்டியுள்ளது. அதாவது ஒருவர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் 3 வெவ்வேறு இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பொருள்களை ஒப்டைக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஒப்படைத்த பொருள்களை திரும்பப் பெற மீண்டும் 3 இடங்களுக்கு அலைய வேண்டி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முருகனை தரிசிப்பதற்கு ரூ.200, ரூ.100 உள்ளிட்ட தரிசன டிக்கெட் பெற்றாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காத்திருக்கும் இடங்களில் முறையான பேன் வசதி செய்யப்படவில்லை என்றும், சில இடங்களில் பேன் இருந்தும் செயல்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டண தரிசன டிக்கெட் பெற்று காத்திருக்கும் நேரத்தில் அவசரத்திற்குக் கூட வெளியே செல்ல முடியவில்லை என்றும், இதனால் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு குடிநீர், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: DevoteesluggageThaipusa festivalpalani malaiPalaniPalani Murugan templecellphone
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: பக்தர்களுக்காக 1,100 சதுர அடியில் மிதக்கும் எல்.இ.டி. திரை!

Next Post

சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies