தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் - அண்ணாமலை
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் எனவும், மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நெய்வேலி தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

என் மண் என் மக்கள் பயணம், திருச்சிற்றம்பலமுடையான் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில், பொதுமக்கள் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. 10 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட 2420 கிலோ நடராஜர் சிலை அமைந்திருக்கும் திருக்கோவில். வேலோடு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில், கையில் வில்லோடு அருள்பாலிக்கிறார்.

தமிழகத்தில் இந்த குடும்ப அரசியல், ஊழல் அரசியல் ஒழிய வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்து ஆண்டுகளாக, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி வழங்கி வருகிறார். தமிழகத்தில் தூயதோர் அரசியலை, பாஜக மட்டுமே முன்னெடுக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும் வகையில், பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழக மக்களின் பிரச்சினைகளை, தமிழக பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் எடுத்துக் கூறி, அவற்றிற்கான தீர்வுகளைக் கொண்டு வருவார்கள் என்பது உறுதி.

முன்னதாக புவனகிரியில் பேசிய அண்ணாமலை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால், பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளித்து விடுவரா என்று கேட்கின்றனர். நம்முடைய சரித்திரத்தையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மீட்டெடுப்பது தான் முக்கிய நோக்கம்.

மேலும், அயோத்தி ராமர் கோவில் வாயிலாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு வரவிருக்கும் வருமானம் 25,000 கோடி ரூபாயாக இருக்கும்.அயோத்தி ராமர் கோவில் வாயிலாக மத வேறுபாடின்றி, அம்மாநில மக்கள் வாழ்வாதாரம் உயரும். அதைத்தான் பிரதமர் மோடி முன்னிறுத்துகிறார்.

தமிழகம் ஆன்மிகத்தின் தலைநகரம். தமிழகத்தில் இல்லாத கோவில்களா? தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை எல்லாம் இணைத்து, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமானம் தமிழகத்திற்கு கிடைக்கும்.

ஆனால், இவற்றை பற்றி சிந்திக்காமல், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், கோவில் உண்டியல் பணத்தை திருடுவதையும் மட்டும் தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க இருக்கும் வரை, தி.மு.க.,வின் ஹிந்து விரோத எண்ணம் பலிக்காது.

தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ அக்கட்சியில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. அக்கட்சியில் பதவியில் இருக்கும் வாரிசுகளுக்கு மட்டும் தான் எல்லாமே நடக்கிறது. தமிழகத்தில் முழுமையாக சட்டம் – ஒழுங்கு கெட்டிருக்கிறது என்பதற்கு, தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகும் கொலை, கொள்ளை சம்பவங்களே சாட்சி. ஆனால், தமிழகத்தில் சிறப்பான திராவிட ஆட்சி நடப்பதாக, முதல்வர் தனக்குத் தானே தோளில் தட்டி பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் மக்கள் எப்படி இருக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல் எதுவும் அவருக்கு போய் சேருவதில்லை. யாரோ கொடுக்கும் பொய்யான தகவலை நம்பி, கொடுமையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, விரைவில் வீழ்த்தப்பட வேண்டும்.

அன்றைய நாள் தான், தமிழகத்துக்கான விடிவு. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை, மக்களிடம் காணும் எழுச்சி வாயிலாக நடைபயணத்தின் போது உணருகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: annamalai en mann en makkalstate presidenttamilnadubjpannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

டெல்லியில் கடும் பனிப்பொழிவு – ரயில் சேவை பாதிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies