தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் - அண்ணாமலை
Sep 13, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் எனவும், மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நெய்வேலி தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

என் மண் என் மக்கள் பயணம், திருச்சிற்றம்பலமுடையான் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில், பொதுமக்கள் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. 10 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட 2420 கிலோ நடராஜர் சிலை அமைந்திருக்கும் திருக்கோவில். வேலோடு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில், கையில் வில்லோடு அருள்பாலிக்கிறார்.

தமிழகத்தில் இந்த குடும்ப அரசியல், ஊழல் அரசியல் ஒழிய வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்து ஆண்டுகளாக, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி வழங்கி வருகிறார். தமிழகத்தில் தூயதோர் அரசியலை, பாஜக மட்டுமே முன்னெடுக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும் வகையில், பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழக மக்களின் பிரச்சினைகளை, தமிழக பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் எடுத்துக் கூறி, அவற்றிற்கான தீர்வுகளைக் கொண்டு வருவார்கள் என்பது உறுதி.

முன்னதாக புவனகிரியில் பேசிய அண்ணாமலை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால், பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளித்து விடுவரா என்று கேட்கின்றனர். நம்முடைய சரித்திரத்தையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மீட்டெடுப்பது தான் முக்கிய நோக்கம்.

மேலும், அயோத்தி ராமர் கோவில் வாயிலாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு வரவிருக்கும் வருமானம் 25,000 கோடி ரூபாயாக இருக்கும்.அயோத்தி ராமர் கோவில் வாயிலாக மத வேறுபாடின்றி, அம்மாநில மக்கள் வாழ்வாதாரம் உயரும். அதைத்தான் பிரதமர் மோடி முன்னிறுத்துகிறார்.

தமிழகம் ஆன்மிகத்தின் தலைநகரம். தமிழகத்தில் இல்லாத கோவில்களா? தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை எல்லாம் இணைத்து, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமானம் தமிழகத்திற்கு கிடைக்கும்.

ஆனால், இவற்றை பற்றி சிந்திக்காமல், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், கோவில் உண்டியல் பணத்தை திருடுவதையும் மட்டும் தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க இருக்கும் வரை, தி.மு.க.,வின் ஹிந்து விரோத எண்ணம் பலிக்காது.

தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ அக்கட்சியில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. அக்கட்சியில் பதவியில் இருக்கும் வாரிசுகளுக்கு மட்டும் தான் எல்லாமே நடக்கிறது. தமிழகத்தில் முழுமையாக சட்டம் – ஒழுங்கு கெட்டிருக்கிறது என்பதற்கு, தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகும் கொலை, கொள்ளை சம்பவங்களே சாட்சி. ஆனால், தமிழகத்தில் சிறப்பான திராவிட ஆட்சி நடப்பதாக, முதல்வர் தனக்குத் தானே தோளில் தட்டி பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் மக்கள் எப்படி இருக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல் எதுவும் அவருக்கு போய் சேருவதில்லை. யாரோ கொடுக்கும் பொய்யான தகவலை நம்பி, கொடுமையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, விரைவில் வீழ்த்தப்பட வேண்டும்.

அன்றைய நாள் தான், தமிழகத்துக்கான விடிவு. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை, மக்களிடம் காணும் எழுச்சி வாயிலாக நடைபயணத்தின் போது உணருகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: annamalai en mann en makkalstate presidenttamilnadubjpannamalaiDMK
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

டெல்லியில் கடும் பனிப்பொழிவு – ரயில் சேவை பாதிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies