வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்க்கும் திமுக : அண்ணாமலை
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்க்கும் திமுக : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் மதவெறியை திமுக ஊட்டி வளர்ப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்ட அவர் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது,

தமிழகத்தின் தோல் ஏற்றுமதியில் 30 சதவீதம், ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகள் பங்கு வகிக்கின்றன. வாணியம்பாடியில் உள்ள கழிவு நீர் பிரச்சனை, ஆம்பூரிலும் உள்ளது. நீரில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலந்தால், குடிநீர், விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படாத நீராக மாறிவிடும்.

ஆம்பூர் வாணியம்பாடியில் பாலாற்று கரையில் விவசாயம் செய்வோர் அனைவரையும் விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதில் தான் திமுக அரசு குறியாக இருக்கிறது. போதிய சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கவும், அவை சரியாக செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும் திமுக அரசு தவறிவிட்டது.

நமது பாரதப் பிரதமர், தமது நல்லாட்சியாலும், வெளியுறவுக் கொள்கைகளாலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாலும் உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்படுவதோடு, உலக நாடுகளின் 14 உயரிய விருதுகளால் பெருமைப்படுத்தப்பட்டவர். அவற்றில் 6 விருதுகளை வழங்கியது இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, அபுதாபி அரசர், எகிப்து நாட்டுத் தலைவர், இஸ்லாமிய உலக லீக்கின் தலைவர் என முக்கியமான இஸ்லாமியத் தலைவர்கள், நமது பிரதமரை நெருங்கிய நண்பராகக் கருதுகிறார்கள். ஆனால் தமிழகக் கட்சிகள், நமது பிரதமரை மதவாதி என்று கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அரசு பணிகளில் மொத்தம் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தனர். தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் சிறுபான்மையினர்.

பிரதமரின் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறுவோரில் 33 சதவீதம் பேர் சிறுபான்மையினர். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயன்பெறுவோரில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர் என, காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியை விட,  பாரதப் பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்கள், சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன.

முக்கியமான இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் ஒழிக்கப்பட்டுள்ள, சிறுபான்மை சகோதரிகளுக்கெதிரான முத்தலாக் முறையை இந்தியாவிலும் நீக்கியவர் நமது பிரதமர் மோடி.

அன்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்த பிரிவினையை, இன்று திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்து வருகின்றன. வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது திமுக. சிறுபான்மையினருக்கு திமுக என்ன செய்துள்ளது என்று கேட்டால், ஒரு சாலைக்கும், ஒரு நுழைவாயிலுக்கும் பெயர் வைத்ததை விட, சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்கு எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், கடந்த 2022 – இல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 60% கமிஷன் வேண்டும் என்று கேட்ட காணொளி வெளியானது. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் 50 சதவீதம் தான் வாங்கினாலும், தனக்கு 60 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று உரிமையுடன் கேட்கிறார். இது தான் இவரது மக்கள் பணி. இவர் செய்யும் மற்றொரு பணி, நிலஅபகரிப்பு.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஒரு முதியவருக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை, வில்வநாதன் அபகரிக்க முயற்சித்து, காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, அந்த முதியவர் தீக்குளிக்க முயற்சித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மகேஷ் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கட்டாயப்படுத்தி வாங்கினார் என இவரது நில அபகரிப்புப் பணிகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது.

திமுக மூத்த தலைவர் துரை முருகனின் மகன் என்பதைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாதவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த். இந்த இருவரும் மக்களுக்காக எந்தப் பணிகளுமே செய்ததில்லை.

வரும் பாராளுமன்றத் தேர்தல், ஊழலற்ற நல்லாட்சி வழங்கி வரும் பாரதப் பிரதமர் மோடிக்கும், ஊழல் ஒன்றையே நோக்கமாக வைத்திருக்கும் திமுக கூட்டணிக்கும் இடையேயான தேர்தல். பத்தாண்டு காலமாக நல்லாட்சி தந்த நமது பிரதமர் மோடி , மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags: amburtamilnaduannamalaiDMKannamalai speechen mann en makkal
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : 9-வது இடத்திற்கு சரிந்தது தமிழ் தலைவாஸ் !

Next Post

பாரத் அரிசி ஒரு கிலோ ரூ.29 – அடுத்த வாரம் முதல் விற்பனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies