மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் மறப்பதில்லை : பிரதமர் மோடி
Jul 5, 2025, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் மறப்பதில்லை : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 3, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை  தேசம் என்றும்  மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை உள்ளடக்கிய எரிசக்தி துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர்  நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சாலை, ரயில்வே மற்றும் உயர் கல்வித் துறை, ஐஐஎம் சம்பல்பூர் மாடலையும், நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியையும் மோடி பார்வையிட்டார்.

கூட்டத்திடில பேசிய பிரதமர், ஒடிசாவின் ஏழை பிரிவைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற அனைத்துப் பிரிவினரும் இன்றைய வளர்ச்சித் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள் என தெரிவித்தார். து ஒடிசா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

ஒடிசாவை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மையமாக மாற்ற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் IISER பெர்ஹாம்பூர் மற்றும் புவனேஷ்வரின் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி போன்ற நவீன கல்வி நிறுவனங்களை நிறுவியதன் மூலம் ஒடிசாவின் இளைஞர்களின் தலைவிதி மாறிவிட்டது.

தற்போது, ஐஐஎம் சம்பல்பூர் ஒரு நவீன மேலாண்மை நிறுவனமாக நிறுவப்பட்டதன் மூலம், மாநிலத்தின் பங்கு மேலும் வலுப்பெற்று வருகிறது என மோடி குறிப்பிட்டார்

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் ஸ்ரீ லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை அறிவிப்பதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக ஸ்ரீ அத்வானியின் இணையற்ற பங்களிப்பையும், புகழ்பெற்ற மற்றும் விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினராக பல தசாப்த கால அனுபவத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிப்பது, தேசம் தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை மறப்பதில்லை என்பதன் அடையாளம் என்றும் பிரதமர் மோடி  தெரிவித்தார். அத்வானி  காட்டிய அன்பு, ஆசி மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அனைத்து குடிமக்கள் சார்பாகவும் அவரது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

Tags: IndiaModiodishaAdvanimodi thank advaniSambalpur
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் மக்கள் நீதி மய்யம்!

Next Post

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணி : மீண்டும் தொடங்கப்படும் என அறிவிப்பு!

Related News

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து டார்ச்சர் – போலீசார் மீது வெள்ளி பட்டறை உரிமையாளர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies