நீதி வழங்குவதை உறுதி செய்ய 'ஒத்துழைப்பு' மற்றும் 'ஒருங்கிணைப்பு' ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும்! - அமித் ஷா
Oct 4, 2025, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதி வழங்குவதை உறுதி செய்ய ‘ஒத்துழைப்பு’ மற்றும் ‘ஒருங்கிணைப்பு’ ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும்! – அமித் ஷா

Web Desk by Web Desk
Feb 5, 2024, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நேற்று (2024 பிப்ரவரி 4,) நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சநீதிமன்ற நீதிபதிகள்  சூர்யகாந்த், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய அட்டார்னி ஜெனரல் டாக்டர் ஆர் வெங்கடரமணி, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா, காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ் சிவக்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா,

வர்த்தகத்திற்கோ அல்லது குற்றங்களுக்கோ புவியியல் எல்லைகள் முக்கியமல்ல என்று அவர் கூறினார். வர்த்தகம் மற்றும் குற்றம் இரண்டுமே எல்லையற்றதாகி வருகின்றன என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற நேரங்களில், வர்த்தக தகராறுகள் மற்றும் குற்றங்களை எல்லையற்ற முறையில் கையாள, நாம் சில புதிய அமைப்பையும் பாரம்பரியத்தையும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நீதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார். திருமதி திரௌபதி முர்மு இந்தியாவின் தொலைதூர மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்தவர் என்றும், அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகிப்பது இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வு ஆழமாக உள்ளதைக் காட்டுகிறது என்று கூறினார்.

உள்ளூர் தகராறுகள் முதல் எல்லை தாண்டிய தகராறுகள் வரை, அனைத்தும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார். சிறிய திருட்டு முதல் வங்கி அமைப்பு மற்றும் தரவுகளை ஹேக் செய்வது வரை முழு செயல்முறையும் ஆழமாகி வருகிறது என கூறினார்.  எனவே அவற்றைக் கட்டுப்படுத்த சட்ட அமலாக்க முகமைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அனைத்து நாடுகளின் சட்டங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது எல்லை தாண்டிய குற்றங்களுக்கு விரைந்த நீதி வழங்கல் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார். மற்ற நாடுகளின் சட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்தில், நீதி வழங்குவதை உறுதி செய்வதற்கான ‘ஒத்துழைப்பு’ மற்றும் ‘ஒருங்கிணைப்பு’ ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறினார். மாறிவரும் இன்றைய சூழ்நிலையில், நீதித்துறையும் மாற வேண்டும் என்று கூறினார்.

எல்லை தாண்டிய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நீதிக்கான முழு செயல்முறையிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

19 ஆம் நூற்றாண்டின் சட்டங்களை கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் நீதியை வழங்க முடியாது என்று அவர் கூறினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டவுடன், இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக மேம்பட்ட குற்றவியல் நீதி அமைப்பாக மாறும் என்று தெரிவித்தார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

ஜார்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : தப்புமா சம்பாய் சோரன் அரசு?

Next Post

விண்வெளி செல்லும் பெண் ரோபோ! – ஜிதேந்திர சிங்

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies