டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்திய வழக்கில் தமிழ் சினிமா பிரபலம் அன்வர் உள்ளிட்ட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
தேங்காய் பவுடர் என்ற பெயரில் ரூ.2,000 கோடி போதைப் பொருளை சிலர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்திச் செல்வதாக, டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், டெல்லி போலீசார் நடத்திய திடீர் சோதனையில், தமிழ் சினிமா தயாரிப்பாளர் அன்வர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டது சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என தெரிய வந்தது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், மங்கை திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க சென்னை மேற்கு மாவட்ட அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் சிக்கயுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.