சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Jul 27, 2025, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Mar 7, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி அனைத்து சுற்றுலா சாதனைகளையும் முறியடித்து வருகிறது என்றார்.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மக்களையும் நாட்டையும் 370 வது பிரிவின் மூலம் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், தற்போது மக்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

இன்று ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது, ஏனெனில் ஜம்மு காஷ்மீர் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டுப்பாடுகளில் இருந்து இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது என்றார்.

சட்டப்பிரிவு 370ல் இருந்து ஜம்மு காஷ்மீர் பலன் பெற்றதா அல்லது சில அரசியல் குடும்பங்கள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொண்டனவா? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட உண்மை தெரிய வந்துள்ளது. இன்று சட்டப்பிரிவு 370 இல்லை, எனவே இளைஞர்களின் திறமை முழுமையாக மதிக்கப்படுகிறது. அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்று இங்கு அனைவருக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் உள்ளன என பிரதமர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து அகதிகள், வால்மீகி சமூகம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவது, எஸ்சி பிரிவினருக்கான வால்மீகி சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது, பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சட்டசபையில் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு பலனுக்கான பல சமூகங்களின் தகுதி குறித்தும் அவர் பேசினார்.

வாரிசு அரசியல், ஊழலுக்கும் ஜம்மு காஷ்மீர் பலியாகிவிட்டது. இங்குள்ள முந்தைய அரசுகள் நமது ஜம்மு காஷ்மீர் வங்கியை நாசமாக்கியுள்ளனர். தவறான நிர்வாகத்தால், வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், நீங்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான ரூபாயை இழக்கும் அபாயத்தில் உள்ளீர்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மக்களை தனது குடும்பமாக கருதுவதாக பிரதமர் கூறினார். ரம்ஜான் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் இதயத்தில் தங்கியுள்ளனர். காஷ்மீரிகளின் இதயங்களில் ‘மைன் ஹூன் மோடி கா பரிவார்’ இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகள் எந்த நிலையிலும் நிற்காது என்று உறுதியளிக்கிறேன்.

இன்னும் சில நாட்களில் ரம்ஜான் தொடங்க உள்ளது. நாட்டு மக்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நாளை, மகா சிவராத்திரியை கொண்டாடுவோம், மகா சிவராத்திரிக்கும் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: 370 in J-KViksit Bharat Viksit Jammu KashmirPM Modiprime minister narendra modijammu kashmir
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! – சேவாபாரதி வரவேற்பு!

Next Post

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies