சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Mar 15, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி அனைத்து சுற்றுலா சாதனைகளையும் முறியடித்து வருகிறது என்றார்.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மக்களையும் நாட்டையும் 370 வது பிரிவின் மூலம் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், தற்போது மக்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

இன்று ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது, ஏனெனில் ஜம்மு காஷ்மீர் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டுப்பாடுகளில் இருந்து இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது என்றார்.

சட்டப்பிரிவு 370ல் இருந்து ஜம்மு காஷ்மீர் பலன் பெற்றதா அல்லது சில அரசியல் குடும்பங்கள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொண்டனவா? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட உண்மை தெரிய வந்துள்ளது. இன்று சட்டப்பிரிவு 370 இல்லை, எனவே இளைஞர்களின் திறமை முழுமையாக மதிக்கப்படுகிறது. அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்று இங்கு அனைவருக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் உள்ளன என பிரதமர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து அகதிகள், வால்மீகி சமூகம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவது, எஸ்சி பிரிவினருக்கான வால்மீகி சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது, பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சட்டசபையில் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு பலனுக்கான பல சமூகங்களின் தகுதி குறித்தும் அவர் பேசினார்.

வாரிசு அரசியல், ஊழலுக்கும் ஜம்மு காஷ்மீர் பலியாகிவிட்டது. இங்குள்ள முந்தைய அரசுகள் நமது ஜம்மு காஷ்மீர் வங்கியை நாசமாக்கியுள்ளனர். தவறான நிர்வாகத்தால், வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், நீங்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான ரூபாயை இழக்கும் அபாயத்தில் உள்ளீர்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மக்களை தனது குடும்பமாக கருதுவதாக பிரதமர் கூறினார். ரம்ஜான் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் இதயத்தில் தங்கியுள்ளனர். காஷ்மீரிகளின் இதயங்களில் ‘மைன் ஹூன் மோடி கா பரிவார்’ இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகள் எந்த நிலையிலும் நிற்காது என்று உறுதியளிக்கிறேன்.

இன்னும் சில நாட்களில் ரம்ஜான் தொடங்க உள்ளது. நாட்டு மக்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நாளை, மகா சிவராத்திரியை கொண்டாடுவோம், மகா சிவராத்திரிக்கும் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: 370 in J-KViksit Bharat Viksit Jammu KashmirPM Modiprime minister narendra modijammu kashmir
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! – சேவாபாரதி வரவேற்பு!

Next Post

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies