ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி
Jul 27, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 14, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் டெல்லியைச் சேர்ந்த ஐந்தாயிரம் வியாபாரிகள் உட்பட 1 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் உதவியை  பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் ஸ்வாநிதி திட்டம்,லட்சக்கணக்கான தெருவோர வியாபாரிகளின் குடும்பங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது என்று  கூறினார். ஒருவர் வங்கிக்கு கணக்குத் திறக்கச் சென்றாலும், பலவிதமான உத்தரவாதங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. வங்கியில் கடன் பெறுவது சாத்தியமற்றது.இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில், ஒருவர் எப்படி முன்னேற முடியும்?

கடந்த அரசாங்கம் உங்கள் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை அல்லது பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழ்மையில் இருந்து இங்கு வந்து சேர்ந்தேன். எனவே, யாரும் கருதாதவர்களை மோடி கருதினார் என தெரிவித்தார்.

“மோடி கி உத்தரவாதம்” வியாபாரிகள் எளிய கட்டணத்தில் வங்கிகளில் கடன் பெறுவதை உறுதி செய்துள்ளது. 62 லட்சம் பேருக்கு சுமார் 11,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசிய தலைநகரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டு வருகிறது. நகரங்களில் போக்குவரத்தை எளிதாக்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும்  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் எக்ஸ்பிரஸ் பாதை  விரிவாக்கம் மற்றும் அதன் மெட்ரோ நெட்வொர்க் சேவை குறித்தும் அவர் விவரித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக  ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணி தன் மீது குற்றம்சாட்டும் விஷயத்தில் திட்டம் வகுத்து  செயல்பட்டு வருவதாக  தெரிவித்தார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும் பாஜக வசம் உள்ளதாக தெரிவித்த பிரதமர், ஆனால் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கை கோர்த்துள்ளதாக கூறினார்.

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோத செயல்களை தூண்டுதல்  உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: PM ModibjpdelhiCongress
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 23 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Next Post

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies