ஊழல், வாரிசு அரசியலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் : மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Aug 18, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊழல், வாரிசு அரசியலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் : மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Apr 10, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல், வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேசினார்.

அப்போது, கோயம்புத்தூரின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் மேட்டுப்பாளையத்திற்கு உண்டு என்றும், நீலகிரி தேயிலைக்கு பெயர் போன இடத்துக்கும், டீ விற்பவருக்கும் எப்படி தொடர்பு இல்லை என்று கூற முடியும்.

பல ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை கொடுத்தது காங்கிரஸ் கட்சியால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது.

பல தசாப்தங்களாக, காங்கிரஸ்-திமுக இண்டி கூட்டணி, எஸ்சி-எஸ்டி, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை வீடு, குடிநீர், மின்சாரத்திற்காக ஏங்க வைத்தது. அவர்கள் ஆட்சியில் அனைவருக்கும் வீடு மற்றும் மின்சாரம் கிடைக்காது.

ஆனால் பாஜக அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமர் ஆவாஸை வழங்கியது. ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கொண்டு வந்தது. 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கியது. அவர்களில் பெரும்பாலோர் எஸ்சி-எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தமிழகம் முழுவதும் பாஜக அலை வீசுகிறது. திமுகவை தோற்கடிக்கும் ஆற்றல் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை கடைபிடிக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் விழாவை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. தமிழகத்தில் ராமாயணம் தொடர்புடைய ஏராளமான கோயில்கள் உள்ளன. ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு முன் அந்த கோயில்களுக்கு நான் சென்றேன். ஆனால் திமுகவினருக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசி வருகின்றன.

ஊழலை அகற்றுவோம். ஊழல்வாதிகளை தண்டிப்போம். இது எங்களின் நிலைப்பாடு. ஆனால் இண்டி கூட்டணி தலைவர்கள் என்ன கூறுகிறார்கள். அவர்கள் ஊழலை ஆதரிக்கிறார்கள். ஊழல்வாதிகளை காப்பாற்ற ஒன்றுகூடியுள்ளனர். கச்சத்தீவு தீவை காங்கிரசும் திமுக தாரை வார்த்தது. அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் வெளியிட்டோம். அவர்களுக்கு தேர்தல் மூலம் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இந்தக் குடும்பக் கட்சிகள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களைத் தவிர, எந்த ஏழையும், பழங்குடியினரும் உயர் பதவியில் இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், பழங்குடியினப் பெண்ணை முதன்முறையாக பாஜக குடியரசுத் தலைவராக்கியது. அதற்கு இண்டி கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவின் பலத்தை இண்டி கூட்டணி நம்பவில்லை. கொரோனா தொற்றின் போது  இந்தியாவால் தடுப்பூசி தயாரிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். மேட் இன்  இந்தியா மூலம் தடுப்பூசியை உருவாக்குவோம் என்று கூறினோம்.இந்தியா தயாரித்தது  மட்டுமின்றி, இலவச தடுப்பூசிகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து  கோடிக்கணக்கான மக்களின் உயிரையும் காப்பாற்றியது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பதன்  அடிப்படையில் மாநிலங்கள் பாகுபாடு காட்டப்பட்டன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ‘சப்கா சத்’ திட்டத்தில் செயல்படுகிறது. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். தமிழகத்தில் மனித ஆற்றலும் திறமையும் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்தால் நாடு வளர்ச்சி அடையும்.

திமுக ஆணவத்தில் உள்ளது. அண்ணாமலை யார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு திமுக தலைவர்கள் ஆணவத்தில் உள்ளனர். ஒரு இளைஞர், அதுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளார். காவல்துறை உயரதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். நேர்மையாக அரசியல் செய்து வருகிறார். களத்தில் வீரததை வெளிப்படுத்தி வரும் அவரை உங்களுக்கு தெரியவில்லையா?

இது ஊழலை இந்தியாவிட்டு வெளியேற்றும் தேர்தல் என்றும், வாரிசு அரசியலை வெளியேற்றும் தேர்தல் என்றும், போதை பொருள்களை வெளியேற்றும் தேர்தல் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiNarendra ModiTamilNadu BjpannamalaiMettupalayammodi campagin
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி இந்தியாவின் முகமாக மாறிவிட்டார்: அமெரிக்க எம்.பி.!

Next Post

நாடாளுமன்றத்தில் மிக மோசமான எம்பி ஆ. ராசா தான் – கொந்தளித்த அண்ணாமலை!

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies