எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Jun 6, 2025, 12:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். ஆனால் பாஜக அரசாங்கம் இந்த கிராமங்களை “முதல் கிராமங்கள்” என்று கருதுவதாகவும் அவர் கூறினார்.

எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது. நாட்டின் எல்லையோர கிராமங்களை நாட்டின் கடைசி கிராமங்கள் என்கிறார்கள். எதிரிகள் வந்து விடுவார்களோ என்ற பயம் காரணமாக  எல்லையோர மாவட்டங்களையும், கிராமங்களையும் வளர்ச்சியடையாமல் வைத்துள்ளனர்.

ஆனால் எல்லைப் பகுதிகளையும், எல்லைக் கிராமங்களையும் கடைசி கிராமங்களாகக் கருதாமல், நாட்டின் முதல் கிராமங்களாகக் கருதுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நாட்டின் எல்லைகள் இத்துடன் முடிவதில்லை. நாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. சுமார் 4 கோடி ஏழைகள் பிரதமர் வீடு திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுள்ளனர். பார்மரில், சுமார் 1.75 லட்சம் ஏழைகள் இந்த திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

பார்மர் நகரின் எல்லையில் ரூ.72,000 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்  தொடங்கப்படவுள்ளது.வரும் காலங்களில் இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் உருவாகி இளைஞர்களுக்கு புதிய பாதைகள் உருவாக்கப்படும்.

நான் மூன்றாவது முறையாக பதவியேற்கும் போது,  இங்கு வந்து  சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பேன் என உறுதியளிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

ஜல் ஜீவன் திட்டத்தில் காங்கிரஸ் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு இருந்த காலத்தில் ஜல் ஜீவன் மிஷனில் பெரும் ஊழலில் ஈடுபட்டது. ராஜஸ்தானுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Eastern Rajasthan Canal ProjectCongressbjp governmentpm modi campaginPM Modi in Barmer
ShareTweetSendShare
Previous Post

பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறையை மாற்றிய பிரதமர் மோடி : ஜே.பி நட்டா

Next Post

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான தலைவர் பதவியில் இருந்து மேரி கோம் விலகல்!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies