மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளும் பாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.
‘சங்கல்ப் பத்ரா’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவை அமைத்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும், 24 கூடுதல் உறுப்பினர்களுடன் பணியாற்றுகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கைக் குழு இரண்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது. தேர்தல் அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டது. நமோ செயலி மூலம் 400,000 மற்றும் வீடியோக்கள் மூலம் 1.1 மில்லியனுக்கும் அதிகமான பரிந்துரைகள் வந்துள்ளன.
பாஜகவின் தேர்தல் அறிக்கையானது வளர்ச்சி, செழிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு, மற்றும் அடையக்கூடிய வாக்குறுதிகளை உறுதி செய்யும். வளர்ந்த இந்தியா 2047′ என்ற கருப்பொருளில், இது கலாச்சார தேசியவாதத்தை வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.