ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் : அதிகரிக்கும் பதற்றம்!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் : அதிகரிக்கும் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினரை குறிவைத்து  இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து, இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலால் காஸா நகரமே உருக்குலைந்துள்ளது. மேலும், ரஃபா நகருக்குள் நுழைந்து இஸ்ரேல் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது.

இதற்கிடையே, கடந்த 1-ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலை எச்சரித்தது. பதிலுக்கு இஸ்ரேலும், ஈரான் தாக்குதல் நடத்தினால், நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என்னும் எச்சரித்தது.  இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுக்கிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினர் 40-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இருந்தபோதிலும், இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு அந்த ராக்கெட்டுகளை நடுவானில் தாக்கி அழித்தது.

இதற்கு பதிலடியாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

சிரியாவில் உள்ள தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எப்போதும் வேண்டுமானாலும், ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என்பதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags: IranHezbollahisraelidozens of rockets
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை?

Next Post

2024 ஐபிஎல் : பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் !

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies