மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!
Sep 30, 2025, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!

Web Desk by Web Desk
Apr 21, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீச்சில், இருவர் காயமடைந்த நிலையில், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத்தேவன், மைக்கேல், அசோக், கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு, அப்பகுதியில் நடைபெற்ற வீரகாளியம்மன் கோவில் திருவிழாவில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நவீன்குமார் தனது காரில், கீழவளவு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வெள்ளையத்தேவன், அசோக், கார்த்தி உள்ளிட்ட சிலர் டிபன் பாக்ஸ் குண்டை நவீன்குமாரின் காரின் முன்பக்க கண்ணாடி மீது வீசி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார், காரில் இருந்து இறங்கிய நிலையில், அவரை வெள்ளையத்தேவன் தான் வைத்திருந்த வாளால் வெட்டி உள்ளார்.

இதில் நவீன்குமாரின் வலது கை விரல் துண்டானது. இதனைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கு திரள வெள்ளையத்தேவன் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

மேலும் இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சில், நவீன்குமார் கார் அருகே நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் என்பவருக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள், இருவரையும் உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் குறித்து, கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வெள்ளையத்தேவன், மைக்கேல் எனர் என்ற மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், மற்றும் பாலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வெள்ளையத்தேவன் மற்றும் அசோக் ஆகிய இருவரை கைது செய்து, வாள், டிபன் பாக்ஸ் குண்டு, ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Detonated box bomb near Melur!
ShareTweetSendShare
Previous Post

பாலைவனநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!

Next Post

பாலத்திற்கு அடியில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபர்!

Related News

சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies