பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?
Apr 29, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி, தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், கூட்டணிக்குள்ளாகவே போட்டி வேட்பாளர்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஆகியவற்றோடு திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு தான் பீகார் தேர்தலில் இண்டி கூட்டணியின் வரலாற்றுத் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வெற்றிகளைப் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்துக் களம் கண்ட இண்டி கூட்டணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 72 தொகுதிகளை வெற்றிபெற்றிருந்த பாஜக தற்போது 90க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜனதா தளம் தற்போது 80க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்த ஆர்ஜேடி தற்போதைய தேர்தலில் 30க்கு குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மிகப்பெரிய பின்னடவை சந்தித்திருக்கிறது.

தொகுதிப்பங்கீடு தொடங்கி வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமாக நடைபெற்றது தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதே நேரத்தில், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி தொகுதிப்பங்கீடு, போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு, முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பதில் குளறுபடியென இண்டி கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களே அக்கூட்டணிக்கு தோல்வியைப் பெற்று கொடுத்திருக்கிறது.

பீகார் மாநிலத்தில் தான் சந்திக்கப் போகும் தோல்வியை முன்கூட்டியே கணித்த இண்டி கூட்டணி, மக்களை திசை திருப்புவதற்காக வாக்குத் திருட்டு எனும் நாடகத்தைப் பிரச்சாரமாக அரங்கேற்றியது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பீகாருக்கே நேரடியாகச் சென்று ராகுல்காந்தியுடன் இணைந்து பேரணியில் பங்கேற்றார்.

தமிழகத்தில் வசிக்கும் பிகார் மக்கள் குறித்த திமுக தலைவர்களின் அருவருக்கத் தக்க பேச்சு அம்மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது ஆர்ஜேடிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதை தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஏற்கனவே, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த அவதூறு பேச்சு, வட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் தலைவர் ஸ்டாலின் தான் தமக்கு பிடித்த தலைவர் எனத் தேஜஸ்வி யாதவ் வெளிப்படையாக அறிவித்ததும் அவரின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

அதோடு வாரிசு அரசியலை பீகார் மாநில மக்கள் விரும்ப மாட்டார்கள் என்ற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுகள் நிதர்சனமான உண்மை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ராகுல்காந்தியின் ஆதரவு, 85க்கும் அதிகமான இடங்களில் பேரணி, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதி என ஆர்ஜேடி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியின்றியும், திமுகவின் ஆதரவின்றியும் தனித்து நின்றிருந்தால் கூட ஆர்ஜேடி கணிசமான தொகுதிகளை வென்றிருக்கும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.

அதே நேரத்தில் நிதீஷ்குமாரின் வயது, அடிக்கடி மாறும் நிலைப்பாடு ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொய்பிரச்சாரங்களும் இந்தத் தேர்தலின் மூலம் தவிடிபொடியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாகக் கருதப்பட்ட பீகார் மாநிலத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி வாக்குத் திருட்டு எனும் பொய் பிரச்சாரத்திற்கும், வாரிசு அரசியலுக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது.

Tags: DMKMK StalinBihar electionIs DMK the reason why the Indi alliance is losing ground in Bihar?
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

Next Post

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies