முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!
Jul 31, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் பூஜ்யமான ஜன் சுராஜ் கட்சி!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, டெபாசிட் இழந்திருப்பது கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்று ஆண்டுகள் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர், பீகாரில் வேரூன்றியிருந்த சாதி, அரசியலுக்கு மாற்றான முழக்கத்தோடு, ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கியிருந்தார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலில், 238 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தில் குதித்தார் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், பிரசாந்த் கிஷோர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணிக்குப் போட்டியாகத் தேர்தலில் தனித்து களமிறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிமீது தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட இவரது கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தனர்.

அதன்படியே பீகார் முழுவதும் அவர் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்…. மூன்றாயிரம் கிலோ மீட்டர் பேரணி நடத்திய பிரசாந்த் கிஷோருக்கு, செல்லும் இடமெல்லாம் கூட்டமும் கூடியது… இதனால், அவை வாக்குகளாக மாறும் என்றே எண்ணியிருந்தார் பிரசாந்த் கிஷோர்… ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது அவரது எண்ணமெல்லாம் தவிடுபொடியானது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட அவருக்கு மூன்று நான்கு இடங்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது… ஆனால் களத்தில் ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் பட்சத்தில், அரசியலில் இருந்தே விலகுவோன் என்று சவால் விடுத்திருத்திருந்தார் பிரசாந்த் கிஷோர்… தற்போது அவரது சவாலே, அவரது கட்சியின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது… பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை நிதிஷ்குமார் முடித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஜன் சுராஜ் கட்சி மற்றக் கட்சிகளைப் போன்று வலுவான பூத் அமைப்பை உருவாக்காதது தேர்தலில் பிரதிபலித்தது… பிரசாந்த் கிஷோரை தவிர, கட்சியில் வலிமையான தலைவர்கள் இல்லாததும், விரைவான அணுகுமுறை இல்லாததும் பின்னடைவை ஏற்படுத்தியது.. தேர்தல் அறிக்கை, யாருடன் கூட்டணி போன்ற கேள்விகளுக்கு அவரது கட்சியினரிடம் விடை இல்லாமல் இருந்ததும், பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடாததும் பெரும் பின்னடைவாக அமைந்தது.

பிரசாந்த் கிஷோரின் பிரச்சாரம் வளர்ச்சி சார்ந்து இருந்தபோதும், பீகாரின் தேர்தல் களம், அடையாளம் போன்றவை சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதில் கவனம் செலுத்தாதது தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Tags: Bihar electionPrashant Kishor's political future is over: Jan Suraj Party null and void in Bihar electionsபிரசாந்த் கிஷோரின் அரசியல்
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Next Post

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies