முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் பூஜ்யமான ஜன் சுராஜ் கட்சி!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, டெபாசிட் இழந்திருப்பது கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்று ஆண்டுகள் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர், பீகாரில் வேரூன்றியிருந்த சாதி, அரசியலுக்கு மாற்றான முழக்கத்தோடு, ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கியிருந்தார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலில், 238 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தில் குதித்தார் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், பிரசாந்த் கிஷோர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணிக்குப் போட்டியாகத் தேர்தலில் தனித்து களமிறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிமீது தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட இவரது கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தனர்.

அதன்படியே பீகார் முழுவதும் அவர் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்…. மூன்றாயிரம் கிலோ மீட்டர் பேரணி நடத்திய பிரசாந்த் கிஷோருக்கு, செல்லும் இடமெல்லாம் கூட்டமும் கூடியது… இதனால், அவை வாக்குகளாக மாறும் என்றே எண்ணியிருந்தார் பிரசாந்த் கிஷோர்… ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது அவரது எண்ணமெல்லாம் தவிடுபொடியானது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட அவருக்கு மூன்று நான்கு இடங்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது… ஆனால் களத்தில் ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் பட்சத்தில், அரசியலில் இருந்தே விலகுவோன் என்று சவால் விடுத்திருத்திருந்தார் பிரசாந்த் கிஷோர்… தற்போது அவரது சவாலே, அவரது கட்சியின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது… பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை நிதிஷ்குமார் முடித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஜன் சுராஜ் கட்சி மற்றக் கட்சிகளைப் போன்று வலுவான பூத் அமைப்பை உருவாக்காதது தேர்தலில் பிரதிபலித்தது… பிரசாந்த் கிஷோரை தவிர, கட்சியில் வலிமையான தலைவர்கள் இல்லாததும், விரைவான அணுகுமுறை இல்லாததும் பின்னடைவை ஏற்படுத்தியது.. தேர்தல் அறிக்கை, யாருடன் கூட்டணி போன்ற கேள்விகளுக்கு அவரது கட்சியினரிடம் விடை இல்லாமல் இருந்ததும், பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடாததும் பெரும் பின்னடைவாக அமைந்தது.

பிரசாந்த் கிஷோரின் பிரச்சாரம் வளர்ச்சி சார்ந்து இருந்தபோதும், பீகாரின் தேர்தல் களம், அடையாளம் போன்றவை சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதில் கவனம் செலுத்தாதது தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Tags: Bihar electionPrashant Kishor's political future is over: Jan Suraj Party null and void in Bihar electionsபிரசாந்த் கிஷோரின் அரசியல்
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Next Post

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies