மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!
May 7, 2026, 09:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!

Murugesan M by Murugesan M
Apr 21, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீச்சில், இருவர் காயமடைந்த நிலையில், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத்தேவன், மைக்கேல், அசோக், கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு, அப்பகுதியில் நடைபெற்ற வீரகாளியம்மன் கோவில் திருவிழாவில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நவீன்குமார் தனது காரில், கீழவளவு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வெள்ளையத்தேவன், அசோக், கார்த்தி உள்ளிட்ட சிலர் டிபன் பாக்ஸ் குண்டை நவீன்குமாரின் காரின் முன்பக்க கண்ணாடி மீது வீசி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார், காரில் இருந்து இறங்கிய நிலையில், அவரை வெள்ளையத்தேவன் தான் வைத்திருந்த வாளால் வெட்டி உள்ளார்.

இதில் நவீன்குமாரின் வலது கை விரல் துண்டானது. இதனைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கு திரள வெள்ளையத்தேவன் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

மேலும் இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சில், நவீன்குமார் கார் அருகே நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் என்பவருக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள், இருவரையும் உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் குறித்து, கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வெள்ளையத்தேவன், மைக்கேல் எனர் என்ற மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், மற்றும் பாலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வெள்ளையத்தேவன் மற்றும் அசோக் ஆகிய இருவரை கைது செய்து, வாள், டிபன் பாக்ஸ் குண்டு, ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Detonated box bomb near Melur!
ShareTweetSendShare
Previous Post

பாலைவனநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!

Next Post

பாலத்திற்கு அடியில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபர்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

பீகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் – பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies