எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?
Jul 28, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​ இல்லாமல் 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்களுக்​குச் சென்று​ விட்​ட​னர். எங்கே நடந்தது இந்தச் சம்பவம்? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் ஏணி மேல் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் விலை சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் தங்கம் விற்பனை குறைவதோடு அவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்கத்தை உற்பத்தி செய்யும் பொற்கொல்லர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பு கோவையிலும் எதிரொலித்துள்ளது.

தொழில் நகரான கோவை, தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்​றுள்​ளது. 40 ஆயிரம் பொற்​கொல்லர்​கள் உட்பட சுமார் ஒரு லட்​சம் பேர் வரை இத்தொழிலில் வேலை​ வாய்ப்பினை பெற்​றுள்​ளனர். ஆனால் தங்​கத்​தின் விலை தற்போது வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​ பாதிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குப் பின் தங்​கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரு​கிறது.

மத்​திய அரசு தங்​கம் இறக்​கும​திக்கு விதிக்​கப்​பட்ட வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் விதிக்​கப்​படு​கிறது. ஆனாலும் உலக சந்தை நில​வரத்​துக்கு ஏற்பத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரு​கிறது. கோவை நகரில் சராசரி​யாக நாளொன்றுக்கு 200 கிலோ அளவுக்குத் தங்க நகை வணி​கம் நடை​பெற்று வந்​தது. ஆனால் இப்போது அப்படியில்லை. தொடரும் விலை உயர்​வால் தங்க நகை தயாரிப்புத் தொழில் முற்​றி​லும் முடங்கியுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் கோவை​யில் மொத்​தம் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உள்ளனர். தற்​போது நில​வும் நெருக்​கடி​யான சூழல் காரணமாக 10 ஆயிரம் பேர் தங்​களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தங்க நகை உற்பத்தியையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பொற்கொல்லர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags: today gold rate22 carat gold rateதங்கம்Unattainable gold: What is the future of goldsmiths?
ShareTweetSendShare
Previous Post

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

Next Post

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies