எப்போது நிறைவேறும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் பயனைத் தங்களுக்கு முழுமையாகக் கொடுக்காமல் அதிகாரிகள் அரசியல் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

கொங்கு மண்டலத்தின் 60 ஆண்டு கால கனவுத் திட்டம் அத்திக்கடவு-அவிநாசி திட்டம். பவானிசாகர் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுத்து மேட்டுப்பகுதிகளான அவிநாசி தொகுதிக்குட்பட்ட 1,400 குளம் குட்டைகளில் நிரப்புவதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படைய திட்டம் வகுக்கப்பட்டது. நல்ல நோக்கத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் 50 சதவீத பணிகள் அந்த ஆட்சிலேயே முடிக்கப்பட்டன.

ஆனால் அதற்குப் பின்னர் பொறுப்பேற்ற திமுக அரசுத் திட்டத்தை முறையாகக் கண்காணித்து முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குளம், குட்டைகளில் பாதி அளவுக்குக்கூட தண்ணீர் வந்து சேரவில்லை. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உதாரணத்திற்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டம் கண்டுகொள்ளப்படாததால் அன்னூர் தாலுகாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வராமல் 50க்கும் மேற்பட்ட குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவ மழை காலங்களிலும் போதிய அளவில் மழை பெய்யாமல் தண்ணீரின்றி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு போகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நல்ல முறையாகச் செயல்படுத்தப்பட்டால் மேலும் சில திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். விவசாயிகள் அதற்கு நெருக்கடி கொடுப்பார்கள். எனவே இந்தத் திட்டத்தை ஃபெயிலியர் திட்டம் எனக் காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியும்கூட இதுவரை இந்தத் திட்டம் முழுமை பெறாததால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டதற்கு காரணம் என்ன? அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அல்லது இந்த திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்த எல் அண் டி நிறுவனத்தின் அலட்சியபோக்கா என்பதும் விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.

அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டதன் மூலம் திமுக அரசு தங்களை வஞ்சித்துவிட்டது என்பதே விவசாயிகளின் வேதனைக் குரலாக இருக்கிறது. தங்கள் குமுறலுக்கு திமுக அரசு என்ன தீர்வு சொல்லப் போகிறது என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

Tags: தவிக்கும் விவசாயிகள்newsTodayaccident news todayWhen will the Athikadavu - Avinashi project be completed? : Farmers are yearning
Share
Tweet
SendShare
Previous Post

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

Next Post

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies