அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த தொகுதியில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும், இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் எழுச்சியை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Urging the people of Andhra Pradesh, especially first time voters, to vote in record numbers in the Assembly Elections. May these polls further enhance our democratic spirit.
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
அனைவரும் தங்கள் கடமையை நிறைவேற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.