பொருளாதார சீர்திருத்தங்களால் வலுவான நிதி அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் இருப்பதாகவும், அக்கட்சியின் வெற்றி நாட்டின் பங்குச் சந்தையில் சாதனை படைக்கும் என தெரிவித்தார். ஜூன் 4-ம் தேதி, பா.ஜ.க சாதனை படைக்கும் போது, பங்குச் சந்தையும் புதிய சாதனைகளை எட்டும் என்று அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டில் 25,000 புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் தற்போது 75,000 புள்ளிகளாக உயர்ந்துள்ளதாக வணிக நாளிதழ் கூறியதாக பிரதமர் மோடி கூறினார். முதலீட்டாளர்கள் தனது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதையும் அவர் விவரித்தார்.
2014 ஆம் ஆண்டில் 1 கோடியிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4.5 கோடியாக ஆக அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக, உள்நாட்டு முதலீட்டின் பரந்த அடித்தளத்தை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.