காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் பலவீனமாக இருந்த காங்கிரஸ் அரசு, உலக நாடுகளிடம் உதவிக்காக கையேந்தியதாக குறிப்பிட்டார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைவுகூர்ந்த பிரதமர், பாஜக ஆட்சியில்தான் பாகிஸ்தான் மண்ணிலேயே நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
ஹிமாசல பிரதேசத்தின் உயர்ந்த சிகரங்கள் நமது எண்ணம் உயர்வாக இருக்க வேண்டுமென போதிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தாய்நாட்டை யாரும் இழிவாக பேசுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய பிரதமர் மோடி, ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் சொல்வதில் காங்கிரசுக்கு பிரச்சினை இருப்பதாகவும் விமர்சித்தார்.