கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் : 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்!
May 6, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் : 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகளால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோட்டைகரையைச் சேர்ந்த கல்யாணி என்பவர் அப்பகுதியில் தானமாக வழங்கப்பட்ட ஒன்றரை செண்ட் பட்டா நிலத்தில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார். இவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் வீட்டை காலி செய்யுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மிரட்டியதுடன், வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார், 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை, மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பீரிதி , வருவாய் ஆய்வாளர் கோமதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய சர்மா ஆகிய மூவரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ராஜ்குமார், தற்கொலை முயன்ற சம்பவத்திற்கு கோட்டாட்சியர், ஊர் தலைவர் உள்ளிட்டோர் தான் காரணம் என வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

Tags: tiruvallurKummidipoondiKummidipoondi.house issueyouth tried to commit suicide
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர் : அதிக தொகுதிகளில் தொழிலாளர் கட்சி முன்னிலை

Next Post

சென்னையில் காற்று மாசு காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்பு : ஹாவர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies