உலக வங்கி கணிப்பு உயர் வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?
Aug 24, 2025, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக வங்கி கணிப்பு உயர் வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Web Desk by Web Desk
Aug 4, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, சீனா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் நடுத்தர வருமான வலையில் விழும் அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

2022ம் ஆண்டில் உலக வங்கி நடுத்தர வருமான நாடுகளுக்கான வரையறையை மாற்றியது. அதாவது 1,086 அமெரிக்க டாலர் முதல் 13,205 அமெரிக்க டாலர் வரை தனிநபர் மொத்த தேசிய வருமானம் உள்ள நாடுகளே நடுத்தர வருமான நாடுகளாக குறிக்கப்படுகின்றன.

நிதி ஸ்திரத்தன்மை, உலகளாவிய வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நிலையான முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த நடுத்தர வருமான நாடுகளை உலக வங்கி வரிசைபடுத்துகிறது.

நடுத்தர வருமானம் கொண்ட நாடு, உயர் வருமானம் கொண்ட பொருளாதாரமாக மாறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையை நடுத்தர வருமான வலை என்று கூறுகிறது உலக வங்கி.

நடுத்தர வருமான வலை அல்லது பொறியில் சிக்கும் நாடுகளையும் பட்டியலிட்டு வெளியிடுவதை உலக வங்கி வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் தான், இந்தியா மற்றும் சீனா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள், உயர் வருமானம் கொண்ட வளர்ந்த பொருளாதாரங்களுக்கு மாறுவதற்குத் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றன.

இதனால் இந்த நாடுகள், நடுத்தர வருமான வலையில் விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று உலக வங்கி அதன் முக்கிய உலக வளர்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1990ம் ஆண்டு முதல் 34 நடுத்தர வருமான நாடுகள் மட்டுமே அதிக வருமானம் பெறும் நாடுகளாக முன்னேற முடிந்தது என்று கூறும் உலக வங்கி, நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் தங்கள் பொருளாதார திட்டத்தை மாற்றவில்லை என்றால், முன்னேறுவது சிரமம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

2023ம் ஆண்டில் 108 நாடுகள் நடுத்தர வருமானம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உலகவங்கி, உலக மக்கள் தொகையில் 75 சதவீத மக்கள் இந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்றும் , இந்த ஆறு பில்லியன் மக்களில், மூன்றில் இரண்டு பேர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர் என்றும் கவலையைத் தெரிவித்திருக்கிறது.

முதலீட்டை அதிகரிப்பதோடு, வெளிநாடுகளில் இருந்து பெறப் பட்ட தொழில்நுட்பங்களை உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்து செயற்படுமாறும், படிப்படியாக முன்னேறும் கொள்கைகளின் திட்டத்தைச் செயல்படுத்துமாறும் உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த வர்த்தகம் மற்றும் திறந்த பொருளாதாரங்களின் பாரம்பரிய வளர்ச்சி சூழல் வேகமாக சரிந்து வருவதே வளர்ந்து வரும் 108 மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உள்ள முக்கிய சவால் என்று உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை எட்டுவதற்கு சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும், இந்தியா 75 ஆண்டுகளும் ஆகும் என்று உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பது பாராட்டத்தக்க இலக்கு என்று உலக வங்கியின் அறிக்கை புகழாரம் சூட்டி இருக்கிறது.

Tags: Will India become a high-income country as predicted by the World Bank?
ShareTweetSendShare
Previous Post

பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! – எச்.ராஜா

Next Post

சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies