வக்பு வாரியச் சட்டதிருத்தம்! - யாருக்கும் எதிரானது அல்ல!- அண்ணாமலை
Aug 24, 2025, 05:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்பு வாரியச் சட்டதிருத்தம்! – யாருக்கும் எதிரானது அல்ல!- அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 7, 2024, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த சட்டத்திருத்தம், யாருக்கும் எதிரானது அல்ல. அனைத்து சமுதாய மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே அமையப்பெற்றுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வக்பு வாரியச் சட்டம் 1995ல், நமது மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வரவிருக்கிறது. இது குறித்து, நமது மாண்புமிகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ அவர்கள், செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்தத் திருத்தங்களுக்கு, பெரும்பாலான இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும், மத்திய அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ அவர்களை நேரில் சந்தித்து, தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வழக்கம்போல, எதிர்க்கட்சிகள் உண்மையை அறியாமல், பொதுமக்களைத் திசைதிருப்புவதற்காக, இந்தத் திருத்தங்களை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில், அதிக நிலம் வைத்திருக்கும் அமைப்புக்களில், முதலாவதாக இந்திய ராணுவமும், இரண்டாவதாக இந்திய ரயில்வே துறையும், மூன்றாவதாக, வக்பு வாரியமும் இருக்கின்றன.

மொத்தமாக, 9.40 லட்சம் ஏக்கர் நிலம், வக்பு வாரியத்திடம் உள்ளது. இந்த நிலங்கள், 8,70,000 சொத்துக்களாகப் பிரித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, சுமார் ரூ. 1.25 லட்சம் கோடியாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலங்கள் எப்படி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது என்பதில்தான் பொதுமக்களிடையே குழப்பம் இருக்கிறது.

உதாரணமாக, சமீபத்தில், திருச்சியில் உள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதுமே வக்ஃபு வாரியத்தின் சொத்து எனக் கூறிவிட்டார்கள். ஆனால், திருச்செந்துறையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.

அப்படி இருக்கையில், திருச்செந்துறை கிராமம் எப்படி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானதாக இருக்க இருக்க முடியும்? திருச்சி, வேலூர் உட்பட, தமிழகம் முழுவதுமே பல்வேறு இடங்களில் இந்தப் பிரச்சினை நிலவுகிறது.

குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர், அந்த நிலத்தை விற்க முயற்சி செய்யும்போது, அது வக்பு வாரியத்தின் சொத்து என்று அறிவிக்கப்பட்டிருந்தால், நிலத்தின் உரிமையாளர், வக்பு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற்று, பதிவாளர் அலுவலகத்தில் வழங்கினால் மட்டுமே நிலத்தை விற்க முடியும் என்ற நிலை தற்போது இருக்கிறது.

தலைமுறை தலைமுறைகளாக ஒரு குடும்ப உறுப்பினர்கள், இடத்தின் உரிமையாளர்களாக இருந்து வரும்போது, திடீரென அந்த இடம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டால், அதனைப் பொதுமக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பலதரப்பினரும் இருக்கிறார்கள்.

நமது நாட்டைப் பொறுத்தவரை சன்னி, ஷியா என்ற இரு பெரும் பிரிவு முஸ்லீம்களைத் தவிர, சூஃபி முஸ்லீம் பிரிவினரும் இருக்கிறார்கள். வக்பு வாரிய சட்டத்தில், சூஃபி முஸ்லீம்களுக்கான மதிப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கிறார்கள். மேலும், தங்கள் சொத்துகளிலும் வக்பு வாரியம் தலையிடுகிறது என்றும், தங்கள் சொத்திற்கும் வக்பு வாரியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் அவர்கள் குரலாக இருக்கிறது.

இது போன்ற குழப்பங்களைக் களையவும், தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும், சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்களுக்கே, சொத்தில் உரிமையை உறுதி செய்யவும்தான், நமது மத்திய அரசு, வக்பு வாரியச் சட்டம் 1995ல், திருத்தம் கொண்டு வர உள்ளது.

ஒரு சொத்தை வக்பு வாரிய சொத்து என அங்கீகரிக்கும் அதிகாரம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்குத்தான் உண்டு என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த வக்பு வாரியச் சட்டத் திருத்தங்கள் மூலம், சமூகத்தில் அமைதி நிலவவும், இஸ்லாமியச் சகோதரிகள், சமூகத்தில் பின்தங்கியிருக்கும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும், நன்மையே கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

வழக்கம்போல, வக்பு வாரியச் சட்டத் திருத்தத்தில், திமுக உள்ளிட்ட கட்சிகள், தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க நாடகமாடுவது வெளிப்படை. இந்த சட்டத்திருத்தம், யாருக்கும் எதிரானது அல்ல. அனைத்து சமுதாய மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே அமையப்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags: Waqf Board Amendment! - Not against anyone!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 12th பெயில்!

Next Post

வயநாடு நிலச்சரிவு – ரூ.2 கோடி வழங்கிய பிரபாஸ்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies