65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! - அண்ணாமலை
Feb 4, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக பாஜகவின் கோரிக்கை நிறைவேறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு வழியாக, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் 17 அன்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காலதாமதமாக்கிக் கொண்டிருந்த திமுக அரசு, ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை அடுத்துப் பணிந்திருக்கிறது. பொதுமக்களின் 70 ஆண்டு காலக் கனவு, தமிழக பாஜகவின் வலியுறுத்தலின் பேரில் நிறைவேறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைவதோடு, லட்சக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். கடந்த 39 மாதங்களாகத் தாமதப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கத் திமுக அரசு கடமைப்பட்டுள்ளது என்பதையும், இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி இதுவரையிலும் வழங்கவில்லை அவர்களுக்கான இழப்பீடு, திட்டத்தின் தொடக்க விழா அன்றே அறிவிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாமல், பல ஆண்டுகள் காலதாமதமாகியிருக்கிறது. திட்டம் நிறைவேறுவது, அவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படுவதே, அந்த மகிழ்ச்சியை முழுமையானதாக்கும்.

எனவே, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும், உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அது மட்டுமின்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.

தமிழகத்தில், பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை.

இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் திரு. ஸ்டாலின் முன்வர வேண்டும். இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

தற்போது, ஆகஸ்ட் 17 அன்று, திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது. எனினும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: annamalai latest speechannamalai latest newsk annamalai speechk annamalai latestk annamalai india todayannamalai latestannamalai ipsVictory for farmers who fought for 65 years for Athikadavu Avinasi project! - Annamalaiannamalai newsannamalai livek Annamalai Bjpbjp k annamalaiannamalai pressmeetbjp annamalaiAnnamalai Press Meetannamalai aniannamalaik annamalai interviewannamalai annak annamalaik annamalai news todayannamalai bjpk annamalai latest interviewannamalai speechk annamalai ips
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Next Post

விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயி தற்கொலை!

Related News

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies