நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் டெல்லியில் பிரதமர் மோடியின் முன்னிலையில் இன்று தொடங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை இன்று தொடங்குகிறது. தலைநகர் டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியில், முதல் உறுப்பினராக பிரதமர் மோடி தமது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்கிறார்.
இந்த உறுப்பினர் சேர்க்கையின்போது பழைய உறுப்பினர்கள், தங்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். மேலும், புதிதாகவும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதேபோல தமிழகத்திலும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் நிர்வாகிகளை நியமித்து பாஜகவினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த உறுப்பினர் சேர்க்கை பணியை தொடர்ந்து 45 நாட்கள் மேற்கொள்ள பாஜவினர் திட்டமிட்டுள்ளனர்.