நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் - புத்துயிர் பெறுவது எப்போது?
Oct 9, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் – புத்துயிர் பெறுவது எப்போது?

Web Desk by Web Desk
Sep 6, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டத்தில் நலிந்து வரும் கோரைப் பாய் உற்பத்தியை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்  உதவிக்கரம் நீட்ட வேண்டுமென, பாய் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாய்கள், உடல் சூட்டை தணித்து, நிம்மதியான உறக்கத்தைத் தரவல்லது. இதனால் கோரைப் புற்களால் தயாரிக்கப்பட்ட பாய் வகைகளையே, வீடுகளில், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில், பாய் தயாரிப்பு, முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பாய்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த பகுதிகளில் பாய் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், இதற்காக கோரைப் புற்களை 6 மாத காலம் வளர்க்கின்றனர். பின்னர் அறுவடை செய்து, தரம் பிரித்து, 3 நாட்கள் வரை தண்ணீரில் நன்கு ஊற வைக்கின்றனர்.

அதன் பிறகு, கோரைப் புற்களின் மேலுள்ள தேவையில்லாத பக்கக் கதிர்களை அகற்றி, வெயிலில் உலர்த்துகின்றனர். பிறகு பல்வேறு நிறங்களைச் சேர்த்து, அடுப்பில் நீருடன் வேக வைத்து , மீண்டும் காய வைத்து, பல அளவுகளில், பல்வேறு வகையான பாய்களை தயாரிக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு செயல்முறைகளுக்குப் பின் உருவாக்கப்படும் கோரைப் பாய் தயாரிப்பு தொழில், முன்புபோல் இல்லையென்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாகரீக வளர்ச்சியால் பிளாஸ்டிக் பாய்கள், பஞ்சு மெத்தை உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தொடங்கியதால், பாரம்பரியமிக்க கோரைப் பாய் தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருவதாகவும், இதனால் வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரவநல்லூர் பாய் நெசவாளர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் தற்போது வெறும் 20 குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைத் தவிர 40 குடும்பத்தினர், தங்கள் வீடுகளில் பாய்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். பாய் உற்பத்தி தொழில் மெல்ல மெல்ல நலிவடைந்து வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags: Veeravanallurfennel grasstirunelveliMat manufacturingPadtamadai
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு!

Next Post

அடிபணிந்த எலான் மஸ்க் – பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு!

Related News

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies