நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் - புத்துயிர் பெறுவது எப்போது?
Aug 24, 2025, 05:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் – புத்துயிர் பெறுவது எப்போது?

Web Desk by Web Desk
Sep 6, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டத்தில் நலிந்து வரும் கோரைப் பாய் உற்பத்தியை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்  உதவிக்கரம் நீட்ட வேண்டுமென, பாய் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாய்கள், உடல் சூட்டை தணித்து, நிம்மதியான உறக்கத்தைத் தரவல்லது. இதனால் கோரைப் புற்களால் தயாரிக்கப்பட்ட பாய் வகைகளையே, வீடுகளில், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில், பாய் தயாரிப்பு, முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பாய்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த பகுதிகளில் பாய் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், இதற்காக கோரைப் புற்களை 6 மாத காலம் வளர்க்கின்றனர். பின்னர் அறுவடை செய்து, தரம் பிரித்து, 3 நாட்கள் வரை தண்ணீரில் நன்கு ஊற வைக்கின்றனர்.

அதன் பிறகு, கோரைப் புற்களின் மேலுள்ள தேவையில்லாத பக்கக் கதிர்களை அகற்றி, வெயிலில் உலர்த்துகின்றனர். பிறகு பல்வேறு நிறங்களைச் சேர்த்து, அடுப்பில் நீருடன் வேக வைத்து , மீண்டும் காய வைத்து, பல அளவுகளில், பல்வேறு வகையான பாய்களை தயாரிக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு செயல்முறைகளுக்குப் பின் உருவாக்கப்படும் கோரைப் பாய் தயாரிப்பு தொழில், முன்புபோல் இல்லையென்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாகரீக வளர்ச்சியால் பிளாஸ்டிக் பாய்கள், பஞ்சு மெத்தை உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தொடங்கியதால், பாரம்பரியமிக்க கோரைப் பாய் தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருவதாகவும், இதனால் வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரவநல்லூர் பாய் நெசவாளர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் தற்போது வெறும் 20 குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைத் தவிர 40 குடும்பத்தினர், தங்கள் வீடுகளில் பாய்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். பாய் உற்பத்தி தொழில் மெல்ல மெல்ல நலிவடைந்து வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags: tirunelveliMat manufacturingPadtamadaiVeeravanallurfennel grass
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு!

Next Post

அடிபணிந்த எலான் மஸ்க் – பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies