நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் - புத்துயிர் பெறுவது எப்போது?
Apr 29, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் – புத்துயிர் பெறுவது எப்போது?

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டத்தில் நலிந்து வரும் கோரைப் பாய் உற்பத்தியை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்  உதவிக்கரம் நீட்ட வேண்டுமென, பாய் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாய்கள், உடல் சூட்டை தணித்து, நிம்மதியான உறக்கத்தைத் தரவல்லது. இதனால் கோரைப் புற்களால் தயாரிக்கப்பட்ட பாய் வகைகளையே, வீடுகளில், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில், பாய் தயாரிப்பு, முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பாய்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த பகுதிகளில் பாய் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், இதற்காக கோரைப் புற்களை 6 மாத காலம் வளர்க்கின்றனர். பின்னர் அறுவடை செய்து, தரம் பிரித்து, 3 நாட்கள் வரை தண்ணீரில் நன்கு ஊற வைக்கின்றனர்.

அதன் பிறகு, கோரைப் புற்களின் மேலுள்ள தேவையில்லாத பக்கக் கதிர்களை அகற்றி, வெயிலில் உலர்த்துகின்றனர். பிறகு பல்வேறு நிறங்களைச் சேர்த்து, அடுப்பில் நீருடன் வேக வைத்து , மீண்டும் காய வைத்து, பல அளவுகளில், பல்வேறு வகையான பாய்களை தயாரிக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு செயல்முறைகளுக்குப் பின் உருவாக்கப்படும் கோரைப் பாய் தயாரிப்பு தொழில், முன்புபோல் இல்லையென்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாகரீக வளர்ச்சியால் பிளாஸ்டிக் பாய்கள், பஞ்சு மெத்தை உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தொடங்கியதால், பாரம்பரியமிக்க கோரைப் பாய் தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருவதாகவும், இதனால் வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரவநல்லூர் பாய் நெசவாளர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் தற்போது வெறும் 20 குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைத் தவிர 40 குடும்பத்தினர், தங்கள் வீடுகளில் பாய்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். பாய் உற்பத்தி தொழில் மெல்ல மெல்ல நலிவடைந்து வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags: Mat manufacturingPadtamadaiVeeravanallurfennel grasstirunelveli
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு!

Next Post

அடிபணிந்த எலான் மஸ்க் – பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies