தமிழகத்தில் ராம்சார் தளங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், வழிபாட்டிற்காக வைக்கப்படும் சிலைகளை தமிழ்நாட்டிலுள்ள 18 ராம்சார் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள் மற்றும் காப்புக்காடுகளில் கரைக்க தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேதாரண்யம் காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா கடல் உயிர்மண்டலக் காப்பகம்,
வெள்ளோடு பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம்,
பள்ளிக்கரணை சதுப்புநிலம், பழவேற்காடு ஏரி, பிச்சாவரம் அலையாத்தி ஆகிய 18 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.