நிதி திரட்டுவதில் பின்னடைவு - சிக்கலில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!
Aug 24, 2025, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதி திரட்டுவதில் பின்னடைவு – சிக்கலில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 3,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.  இதற்காக,  தனது பங்குகளில் 10 சதவீதத்தை விற்பனை செய்ய  முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய விமானப் போக்குவரத்தில் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் விமான நிறுவனமாக இருந்து வந்தது ஸ்பைஸ்ஜெட்.

கொரொனா நோய் பரவல், எரிபொருள் விலை உயர்வு மற்றும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் விபத்துக்கள் ஆகியவை காரணமாக ஸ்பைஸ்ஜெட் சரிவைக் கண்டு வருகிறது.

தற்போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் டெல்லி விமான நிலைய ஆபரேட்டர் டெல்லி சர்வதேச விமான நிலையம் ஆகியோரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.

உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி அதிகமாகி இருக்கும் சூழலில் ஸ்பைஸ் ஜெட் தனது சந்தைப் பங்கில் கடும் சரிவைக் கண்டுள்ளது. வெறும் 3.8 சதவீத சந்தைப் பங்கை வைத்திருக்கும் ஸ்பைஸ் ஜெட் 2019ம் ஆண்டில் 74 விமானச் சேவைகளை வைத்திருந்தது. அதுவும் இந்த ஆண்டு 28 விமானச் சேவைகளாக குறைந்துள்ளது.

2024ம் ஆண்டு முதல் காலாண்டில், ஸ்பைஸ்ஜெட்டின் நிகர லாபம் 20 சதவீதம் சரிந்து 158 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 198 கோடி ரூபாயாக இருந்தது.

இதற்கிடையில் , நிலுவையில் உள்ள குத்தகைதாரர், பொறியியல் மற்றும் EDC கடன்கள் என்ற வகையில் 3,700 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 650 கோடி ரூபாய் சட்டப்படி நிலுவையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்தவும், செயல்பாட்டுத் திறன்களை அதிகரிக்கவும், நிலுவையில் உள்ள நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும், கடந்த சில மாதங்களாகவே நிதி திரட்ட முயற்சி செய்து வந்தது.

ஏற்ககெனவே, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் ரூ. 2,000 கோடியை திரட்டுவதற்கான திட்டங்களை அறிவித்த ஸ்பைஸ் ஜெட்,  பிற விமானங்களைக் குத்தகைக்கு எடுத்து நிறுவனத்தின் வணிகத் திறனை விரிவாக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது .

நிறுவனத்திற்கு மீட்பு நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படும் நிலையில் நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்தன. விமானக் குத்தகைதாரர்கள் உட்பட விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்தத் தவறிவிட்ட காரணத்தால் அவர்களில் சிலர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தகுதிவாய்ந்த நிறுவன வேலை வாய்ப்பு மூலம் 3,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கான முயற்சியை எடுத்திருக்கிறது. இந்த நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் தனது பங்குகளில் 10 சதவீதத்தை விற்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில், சிங்கப்பூர், மும்பை மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நிதி மையங்களில் ஸ்பைஸ்ஜெட் தொடர்ச்சியான ROAD SHOW-நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளது.

வரும் மாதங்களில் 60 புதிய விமானங்களை அறிமுகப்படுத்துவதோடு, பிரபலமான வழித்தடங்கள் மற்றும் குறைவான சேவைகள் என்ற வகையில் விமானச் சேவையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags: Indian aviationfinancial crisisSpiceJet
ShareTweetSendShare
Previous Post

இந்தியா தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம்!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாய் சிக்கியது!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies