அமெரிக்காவில் இந்தியாவை அவமதித்ததற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் கருத்து தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை சிறுமைப்படுத்தும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ஏற்கெனவே மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் காங்கிரஸ் தோற்ற நிலையில், ராகுல் காந்தியின் இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் தெரிவித்தார். அத்துடன் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.