அன்னபூர்ணா உரிமையாளர் விரும்பியே மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார் - ஹெச். ராஜா
Aug 24, 2025, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்னபூர்ணா உரிமையாளர் விரும்பியே மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார் – ஹெச். ராஜா

Web Desk by Web Desk
Sep 14, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்னபூர்ணா விவகாரத்தில் உணவக உரிமையாளர் விரும்பியே தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரினார் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மையக் குழுவின் கூட்டம்  திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் குறித்து ஆலோசனை  நடைபெற்றது.

பின்னர் ஹெ.ராஜா  செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது :

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான அடையாளமாக மத்திய மைச்சர் நிதின் கட்கரி வருகை தந்து அந்த பணிகளை ஆய்வு செய்தார்.

தமிழக அரசு தாமதமில்லாமல் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தால் நெடுஞ்சாலை பணிகள் துரிதமாக நடைபெறும். மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் விரைந்து செயல்படுத்த முடியும்.

மத்திய அரசு வழங்கும் நிதியை செயல்படுத்தும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது. மத்திய அரசின் விஷ்வகர்மா நிதி உதவி திட்டத்தை இதுவரை மாநில அரசு வெளியிடவில்லை. வரும் 17 ஆம் தேதி விஷ்வர்மா தினம். அந்த தினத்திற்குள் மாநில அரசு அரசிதழில் வெளியிட்டால் தொழில் செய்யும் அமைப்பான விஷ்வகர்மாவை சேர்ந்தவர்களுக்கு பயனாக இருக்கும்.

36 விதமான வரிகளை ஒன்றுபடுத்தி சரக்கு மற்றும் சேவை வரியாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. வெண்ணைக்கு வரி ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே இருந்தது.

ஜிஎஸ்டி விவகாரத்தில் சில கோரிக்கைகள் இருக்கலாம். அந்த கோரிக்கைகளை பரிசீலினை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.

கோவை அன்னபூர்ணா உணவக அதிபர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அந்த உணவக அதிபரே நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரே விரும்பி தான் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பாஜகவிற்கும் நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் எந்த பங்கும் இல்லை.

இந்தியாவிற்கு விரோதமாக வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி “ஆண்டி இந்தியன்”. அவர் அமெரிக்கா சென்று இந்தியாவிற்கு எதிரான நபர்களுடன் கலந்துரையாடினார்.
அப்படிப்பட்ட ராகுல் காந்தி குறித்து நாம் பேச வேண்டாம் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Tags: h rajafinance minister nirmala seetharamanannpooran hotel owener
ShareTweetSendShare
Previous Post

பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – பாதுகாப்பு படையினர் இருவர் வீரமரணம்!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies