சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டதாக ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பத்ம விபூஷண் வேத் மூர்த்தி ஸ்ரீபாத் தாமோதர் சத்வாலேகர் எழுதிய நான்கு வேதங்களின் வேத் பாஷ்யத்தின் மூன்றாவது பதிப்பு வெளியீட்டு விழாவில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.
சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டதாகவும், உலகின் அணுகுமுறை மாறி வருவதாக தெரிவித்தார். மக்கள் வேத வாழ்க்கையைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வேதங்கள் அறிவின் பொக்கிஷம், அவை பொருள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சமூகத்திற்கான வாழ்க்கைப் பாடங்களைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
முனிவர்கள் ‘விஸ்வ கல்யாண்’ (உலக நலனுக்காக) வேதங்களை உருவாக்கினார்கள்.
நம்மிடம் ‘வேதாநிதி’ [வேத வடிவில் உள்ள அறிவின் பொக்கிஷம்] உள்ளது. அதை நாம் படித்து, வாழ்வில் செயல்படுத்தி, முடிந்தவரை பலருக்கு அனுப்ப வேண்டும். அதன் அறிவின் பயனைப் பெற அவர்களுக்கு உதவுங்கள் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.
“தர்மம் அனைவரையும் அரவணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது, அவர்களை உயர்த்துகிறது, அவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது. அதனால்தான் தர்மம் வாழ்க்கையின் அடிப்படை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்.
சனாதன தர்மத்தின் எழுச்சிக்கான நேரம் வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. அது வந்துவிட்டது. அதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம். அதை யோகி அரவிந்த் அறிவித்தார். ஒட்டுமொத்த உலகத்தின் அணுகுமுறையும் இந்த திசையில் மாறுகிறது, இதை நாங்கள் அறிவோம் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.