பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை பழிவாங்கும் எண்ணத்தில், விசிக மாநாட்டில் திருமாவளவன் பேசியுள்ளார் எனவும், பெண்ணினத்திற்கே களங்கத்தை உருவாக்க முயன்ற திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விளம்பர அரசியலுக்காக பெண்ணினத்தை திருமாவளவன் கொச்சைப்படுத்தலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில், தேசிய பெண்கள் நலவாரியம் விசாரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.