ஹரியானாவில் பாஜக தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சிக்கு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48-இல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அதேசமயம், தேர்தலில் வென்ற சாவித்ரி ஜிண்டால், தேவேந்திரன் கட்யான் மற்றும் ராஜேஷ் ஜூன் ஆகிய மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் மீண்டும் நாயப் சிங் சைனியே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், வரும் சனிக்கிழமை தசராவையொட்டி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் பிரதமர் மோடியை ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.