ராஜஸ்தான், பீகார் எல்லையோர கிராமங்களில் 4 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணி மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், எல்லையோர கிராமங்களில் 4 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணி மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையொட்டி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் எல். முருகன், இதன்மூலம் கடைகோடி மக்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுவதுடன், அவர்களது வாழ்வாதாரம் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதேபோல பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகித்தை வரும் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கும் மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி கூறினார்.