5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என கடந்த ஆண்டு கூறியது யார் என கேள்வி எழுப்பினார். குறைந்த அளவிலான மழைக்கே சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை முடித்திருந்தால் மழைநீர் தேங்கியிருக்காது என்றும் கூறினார்.
“திருப்புகழ் கமிட்டி பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும், உதயநிதி ஸ்டாலின் முதிர்ச்சியில்லாமல் பேசி வருவதாகம் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
திமுக ஆட்சிக்கு முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியே உதாரணம் என்றும், “அதிமுக ஆட்சியில் பல புயல்களை சந்தித்தபோது புயல்வேகத்தில் மீட்பு பணிகளை செய்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.