போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஆர்வமாக உள்ளதாவும், அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன்தான் நிறுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் புதின், மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளதாகவும், உக்ரைன் உடனான போர் குறித்து தொடர்ந்து கவலைகள் தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி எனவும் கூறினார்.
பிரதமர் மோடியுடன் பேசும் போது, ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் புதின் தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்றும், ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதுதற்கு காரணம் அமெரிக்கா தான் என்றும் அவர் குறிப்பிட்டார். சீனா உடனான உறவு, ஒருவருக்கொருவர் நலன் கருதி கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் புதின் தெரிவித்தார்.