சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை திசை திருப்பவே ஆளுநர் விவகாரத்தை திமுக-வினர் கையில் எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழ் மொழிக்கு மத்திய பாஜக அரசு உரிய மரியாதை தருவதாக தெரிவித்தார். இந்தி மாத கொண்டாட்ட விவகாரத்தில் திமுக அரசு பிரச்னை செய்வது திசைதிருப்பும் செயல் என்றும் அவர் சாடினார்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை திசை திருப்பவே ஆளுநர் விவகாரத்தை திமுகவினர் கையில் எடுத்துள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரத்தில் ஆளுநரை தொடர்புபடுத்துவது முறையல்ல என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.