புதுக்கோட்டையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மாவடத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் நகரின் முக்கிய பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.